கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்வடைந்துள்ளது

Image may contain: one or more people, people sitting, table and indoor

கொரோனா நோய்க்கிருமி பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று ஏப்ரல் 6ந் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களதும் எனதும் தலைமையில் –

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி – அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரும்;

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநித்துவப்படுத்தி – அதன் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும்;

மற்றும் எனது செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கொரோனா நோய்க்கிருமி நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து நான் விரிவாக விளக்கினேன்.

கொரோனா நோய்த்தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் நாம் செயற்பட்ட விதம் குறித்து நான் சுட்டிக்காட்டினேன்.

ஏனைய நாடுகளையும் விஞ்சும் வகையில் மக்களின் பாதுகாப்புக்காக நாம் உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டதனை நான் குறிப்பிட்டேன்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது முதல், அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளைப் பேணிய வகையில் – மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்தனை நான் குறிப்பிட்டேன்.

இதன் காரணமாக கொரோனா கிருமித்தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முடியுமானதாக இருந்தது என்பதனையும்,

சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை உட்பட அரச மற்றும் தனியார் பொறிமுறைகளுடன் நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் எப்போதும் நாம் செயற்பட்டுவருவதனையும் நான் குறிப்பிட்டேன்.

நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை இனம்கண்டு வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் தொற்றுக்குள்ளானவர்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கு முடியுமாக இருந்ததனை நான் குறிப்பிட்டேன்.

40 மத்திய நிலையங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறன. நோயாளிகள் இனம்காணப்பட்ட பிரதேசங்களில் பொதுச் சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் தொற்றுப் பரவுவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்ததுடன், நோயாளிகளைக் கண்காணித்தல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்குப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்பினை இன்றைய கலந்துரையாடலின் போது நான் பாராட்டினேன்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஜக்கிய மக்கள் சக்தியினர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், அரசியல் மற்றும் வேறு பேதங்களின்றி இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் கருத்துப் பரிமாறிக்கொண்டோம்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் எவருக்கேனும் அநீதிகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டிருக்குமானால் அது தொடர்பில் உடனடியாக எடுக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாளாந்த சம்பள அடிப்படையில் நிர்மாணத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்வதற்காக வருகை தந்து கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாது சிக்குண்டிருக்கின்றவர்கள் குறித்த தொழில் வழங்குனர்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் நானும் கேட்டுக்கொண்டோம்.

தொற்றாத நோய்கள் உள்ளிட்ட சுகாதாரத் சேவைகளுக்குத் தேவையான பல்வேறு மருந்துப் பொருட்கள் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்தியாவிலிருந்து ஏப்ரல் 7ந் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது என்பதனை நான் தெரிவித்தேன்.

முழு உலகமும் முகம்கொடுத்துள்ள பொருளாதார, சமூக நிலைமைகளைக் கருத்திற் கொண்டு எமது நாட்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைமையொன்று தற்போது திட்டமிடப்பட்டுள்ளது என்பதனை நான் விளக்கினேன்.

வீழ்ச்சியடைந்துள்ள ஆடை உற்பத்தி மற்றும் சுற்றுலாத் துறை போன்றவற்றைக் கட்டியெழுப்புவது தொடர்பாக நிபுணர்களின் ஆலோசனைகளை நாம் பெற்றுவருவதனையும், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அவர்களின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் செற்படும் என்பதனையும் நான் குறிப்பிட்டேன்.

சமூர்த்தி உதவி பெறுபவர்களுக்கு மேலதிகமாக – முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட 7 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கான 5000 ரூபாய்கள் கொடுப்பனவுகள் எவ்வித பேதமுமின்றி வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கேனும் அது கிடைக்காதுவிடின் கிராம சேவகரின் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது என்பதனை, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் பல்வேறு துறைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கமும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் இதன்போது கலந்துரையாடினோம்.

கோட்டாபய ராஜபக்‌ஷ

Tags: