‘சக்கரம்’ இரண்டாவது ஆண்டினை நிறைவு செய்கின்றது!

‘சக்கரம்’ இணையத்தளம் இன்றுடன் இரண்டாவது ஆண்டினைப் பூர்த்;தி செய்கின்றது என்பதையெண்ணி உங்களைப் போலவே நாங்களும் பெருமிதம் அடைகின்றோம். இந்த இரண்டாண்டு கால பயணத்தில் எம்முடன் பயணித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்றுள்ள இலங்கை நிலவரங்கள், கடந்த 16 மாத கால கொரோனா எனும் கொடிய தொற்று நோய் தொடர்பான விடயங்கள், சர்வதேச சமூக, பொருளாதார அரசியல் நிலைமைகள், சூழலியல், அறிவியல் மற்றும் இசை, கலை, இலக்கியமென பல்வேறு பரப்புக்களில் எமது இணையத்தளம் கால் பதித்துள்ளது. இந்தப் பாதையிலேயே நாங்கள் தொடர்ந்தும் பயணிப்போம்.

உழைக்கும் மக்களின் உன்னதமான தினம் மே தினம். மே தினம் தொழிலாளர்களின் உழைப்புக்குக் கிடைத்த ஒரு வெற்றி நாளாகும். இந்த நாளை ஒரு குறியீட்டு நாளாகக் கொண்டே, ‘சக்கரம்’ இணையத்தளம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாளில் ஆரம்பிக்கப்பட்டது.

உழைப்பு இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது. உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!

ஆசிரியர் குழு

Tags: