‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் இஷாலினி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்’

ட்டன், டயகம சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்த நபரிடம் நேற்று (19.07.2021) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் சிறுமியின் தாய் மற்றும் ரிஷாத்தின், தந்தை, மற்றும் மனைவியிடமும் மீண்டும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று (19.07.2021) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கமர்தப்பட்டிருந்த ஹட்டன் , டயகம சிறுமி எரிகாயங்களுடன் கடந்த ஜூலை 03ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு, பொரளை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.

அதேபோல் நேற்றைய தினம் ரிஷாத்தின் மனைவியின் பெற்றோரிடம் மீண்டும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அந்த சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்த நபரிடம் நேற்று வாக்குமூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுமி டயகம பிரதேசத்திலிருந்தே இங்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அந்த சிறுமியின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொரளை பொலிஸார், முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமி நீண்ட காலகமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணியாற்றியவர்களிடம் 06 மணி நேரத்துக்கும் அதிகமாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் ரிஷாத்தின் தாய் மற்றும் தந்தையிடம் நேற்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நேற்று அவரின் மனைவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ள போதிலும், அவர் திடீர் சுகயீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையினால் வைத்திய ஆலோசனைக்கமைய விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறுமியின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்த சிறுமி தனது 15 வயதில் ரிஷாத்தின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இதேவேளை, சிறுமி கடந்த 08 மாதங்களாக வீட்டிற்கு செல்லவில்லையென தெரிய வந்துள்ளது. அவருக்கு மாதம் 20ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ்.செல்வநாயகம்

டயகம சிறுமிக்கு நீதி கோரி டயகமவில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீ காயங்களுக்கு உள்ளாகி மரணமான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி டயகம பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று (20.07.2021) முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 15 ஆம் திகதி தீ காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டயகம பகுதியை சேர்ந்த 15 வயதுடைய ஹிசாலினி என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய குறித்த சிறுமியின் மரண விசாரணையில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்திருந்தது.

இந் நிலையில் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது டயகம மேற்கு தோட்டத்தில் ஆரம்பமாகி டயகம நகர் வரை இடம்பெற்றுள்ளது.

ஆர்பாட்டத்தில் ஈடுட்டவர்கள் உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டும், முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டாரிடம் உரிய விசாரணை முன்னெடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்த பதாதைகளை ஏந்தி இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு – பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்திற்கு முன்பாக டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை (20.07.2021) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Tags: