நான்காவது ஆண்டினை பூர்த்தி செய்யும் ‘சக்கரம்’ இணையத்தளம்

க்கரம்’ இணையத்தளம் இன்றுடன் நான்காவது ஆண்டினை நிறைவு செய்கின்றது. இந்தச் சாதனையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த நான்காண்டு காலப்பயணத்தில் எமது இணையத்தளத்தின் உள்ளடக்கத்தைச் சிறப்பித்து வரும் கட்டுரைகளினதும் செய்திகளினதும் ஆசிரியர்களுக்கும், எமது இணையத்தளத்திற்கு கிரமமாக வருகை தரும் வாசகர்களுக்கும் மற்றும் எம்மை ஊக்குவிக்கும் நண்பர்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி பெற்ற தினமே மே தினம் ஆகும். இந்த நாளை உலகெங்கிலும் தொழிலாளர்கள் பலரும் வெற்றி நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். அதேபோலவே நாங்களும் நான்கு ஆண்டு காலத்திற்கு முன்னர் ‘சக்கரம்’ இணையத்தை ஆரம்பித்து, இந்த நாளில் மேதினத்தையும் எமது இணையம் ஒவ்வொரு ஆண்டாகக் கால்பதிப்பதையும் இணைத்துக் கொண்டாடுகின்றோம்.

உழைப்போம், உழைப்பால் உயர்வோம். மனிதராய்ப் பிறந்த அனைவரும் கடுமையான உழைப்பின் மூலமே அன்றாட வாழ்வினை நகர்த்திச் செல்கின்றனர். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எமது இனிய மேதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாசகர்களே, எமது இணையத்தளத்திற்கு தினமும் வாருங்கள், வாசியுங்கள், அத்தோடு எமது இணையத்தை ஏனையவர்களோடு பகிர்ந்தும் கொள்ளுங்களென நாங்கள் அன்போடு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

–ஆசிரியர் குழு

Tags: