இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

Afbeeldingsresultaat voor parliament sri lanka

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பின்படி இன்று (மார்ச் 2ந் திகதி)நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.62 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.

இதற்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய 9வது நாடாளுமன்றத்தின் முதலாவது ஒன்றுகூடல் எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image may contain: text
Tags: